னிப் பெயர்ச்சி 2017 : தனுசு  ராசிக்கான பலன்கள்

னுசு  ராசிக்காரர்களுக்கு இதுவரை விரயச் சனியாக இருத்த சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை  ஜன்மச் சனியாக அமர்ந்து பலன்களை தர உள்ளார்.  இனி நிம்மதி பிறக்கும்,   மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்..

வரவேண்டிய பணம் கைக்கு வரக்கூடும்.  கடன்களில் ஒரு பகுதியாவது அடைபடும்.   உடல் ஆரோக்யத்தில் முழுக் கவனம் தேவை.  வாழ்க்கை துணை உடல் நலம் கெடுதல்,   உறவினர்கள் மற்றும் நன்பர்களின் பணம் கேட்டு நச்சரிப்பு, திடீர் பயணத்தால் அலைச்சல் ஆகியவை நிகழும்.  சிலர் வெளிநாடு செல்லக் கூடும்.  சொந்த விஷயங்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கவும்.  மகளின் திருமணம்,  மகனின் மனப்போக்கு மாற்றம் ஆகியவைகளுக்கு வாய்ப்புண்டு.

சனி பகவான் உங்கள் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் கௌரவப் பதவி,  ஆபரண சேர்க்கை, சவால்களில் வெற்றி ஆகியவை உண்டு.  வாழ்க்கைத் துணை உடல் நலத்தில் கவனம் தேவை.  பணி புரியும் இடத்தில் மதிப்பு உயரும்.

வியாபாரிகளுக்கு அதிரடி மாற்றங்கள் நிகழும்.  முதலீடுகளில் கவனம் தேவை.  லாபம் உயரக் கூடும்.  ஓட்டல், கணிணி, உதிரி பாகங்கள், துணிவகைகள் ஆகிய வர்த்தகம் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை கூடும்.  தேவை இல்லாமல் விடுமுறை எடுப்பதை தவிர்க்கவும்.  முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும்.

மாணவர்கள் மற்றும் மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.   மிகவும் உழைத்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்

கலைத்துறையினருக்கு ஊதிய விஷயத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் உங்கள் தன்னம்பிக்கையால் அனைத்து பிரச்னைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.

மூல நட்சத்திரத்தில் 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார்.  இந்த தினங்களில் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு அலைச்சலும் ஏமாற்றங்களும் உண்டாகும்.   சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்புண்டு.   எதுவாக இருப்பினும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல் படுவது நல்லது.

பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரையிலான தேதிகளில் சனி சஞ்சாரம் செய்கிறார்.  இந்தக் காலத்தில் எந்த ஒரு பெரிய முடிவுகளும் எடுக்க வேண்டாம்.   குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளக் கூடாது.   சவாலான காரியங்களும் சிலருக்கு எளிதாக நடக்கும்..

உத்திராடம் நடத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனி பகவான் சஞ்சரிக்கிறார்.  இந்த கால கட்டத்தில்  வேலை வாய்ப்பு, அரசால் ஆதாயம், திடீர் பணவர்வு வழக்கில் வெற்றி, தந்தை வழி சொத்துக்கள் கிடைப்பது ஆகியவகைகளுக்கு வாய்ப்புண்டு.

வக்கிரச் சனி பலன்கள்

மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் வக்கிரமாக செல்கிறார்.  இந்த நேரத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் தடைபட்டிருந்தால் அது கூடி வரும்.

பூராட நட்சத்திரத்தில் 10.5.19 முதல் 11.8.19 வரை, 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை சனிபகவான் வக்கிர சஞ்சாரத்தில் உள்ளார்.  இந்த நேரத்தில்  அயல் நாட்டிலுள்ளோரால் ஆதாயம் உண்டு..

உத்திராடம் நட்சத்திர முதல் பாதத்தில் 2.5.20 முதல் 16.7.20 வரை சனிபகவானின் வக்கிர சஞ்சாரம் இருப்பதால்  எதிலும் கவனம் தேவை.   முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கக் கூடாது..

பரிகாரம் : தேனி மாவட்டம் குச்சனுரில் உள்ள ஸ்ரீ சனீஸ்வரனை வழிபட்டு  வர வேண்டும்.