மிதுன ராசிக்காரர்களுக்கு இதுவரை 6ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை 7ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.  இது  கண்டகச் சனி என்பதால் எல்லாவற்றிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும்.  குடும்பத்தில் வீண்விவாதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பத்திரமாக கையாளவும்.   வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம்.  உடல் ஆரோக்யம் பாதிப்பு,  வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிதல் ஆகியவை நேரிடக் கூடும்.   இரவு நேரப் பயணத்தை தவிர்க்கவும்

சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் அலர்ஜியால் அவதி, தோல் நோய், முடி உதிர்தல் செரிமானக் கோளாறு,, தலை சுற்றல் ஏற்படும்  வீடு வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிப்பு, தாயாரின் உடல் நலம் பாதிப்பு, தாயாருடன் வீண் தகராறு,  கடன் தொல்லை ஆகியவை நேரிடும்.

வியாபாரிகள் வர்த்தக விரிவுக்கு கடன் வாங்க வேண்டம்.  கூட்டுத் தொழிலை அறவே தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சலுகைகள் தேவையான நேரத்தில் கிடைக்காது.  எதிர்பாராத இடமாற்றம், பழைய அதிகாரிகள் ஒத்துழைப்பு இருப்பினும் எந்த ஒரு ஒப்பந்த பத்திரத்திலும் கையெழுத்திட வேண்டாம்.

மாணவர்கள் மற்றும் மாணவிகள் படிப்பில் அலட்ட்சியத்தையும் விளையாட்டில் கவனக் குறைவையும் தவிர்க்கவும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புக்கள் மிகவும் குறையும்.   சிறிய வாய்ப்பையும் அலட்சியம் செய்ய வேண்டாம்.

இந்த சனிப்பெயர்ச்சி அனுபவ அறிவால் வெற்றியைக் கொடுக்கும்

மூல நட்சத்திரத்தில் 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார்.  இந்த தினங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சி, கேட்ட இடத்தில் உதவி, கடன் பிரச்னை தீர புதிய வழி, குடும்ப வருமானம் அதிகரிப்பு, ஆகியவைகலுக்கு வாய்ப்புண்டு.   மிருகசீரிடம் மற்றும் புனர்பூசத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன் கிட்டும்.  திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் உறவினர் நண்பர்களிடம் கருத்து மோதலை தவிர்க்கவும்.

பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரையிலான தேதிகளில் சனி சஞ்சாரம் செய்கிறார்.  இந்தக் காலத்தில் கணவன் – மனவிக்கிடையே விவாதம் அதிகமாகும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  நற்பயன் கிட்டும்..

உத்திராடம் நடத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனி பகவான் சஞ்சரிக்கிறார்.  இந்த கால கட்டத்தில்  புதிய  முயற்சிகள் வெற்றி,  இளைய சகோதரர்களால் உதவி, ஆகியவை நடக்கும்.   குடும்பத்தில் மகிழ்ச்சியும் அரசாங்க விவகாரங்களில் நன்மைகளூம் ஏற்படும்.

வக்கிரச் சனி பலன்கள்

மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் வக்கிரமாக செல்கிறார்.  இந்த நேரத்தில் செலவுகளை மிகவும் குறைத்துக் கொள்ளவும்.   சகோதரர்களிடம் அதிகம் உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்

பூராட நட்சத்திரத்தில் 10.5.19 முதல் 11.8.19 வரை, 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை சனிபகவான் வக்கிர சஞ்சாரத்தில் உள்ளார்.  இந்த நேரத்தில் தாயாரின் உடல்நிலை சீராகும்.  பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு தற்போது சேமிப்பை தொடங்குவது நல்லது..

உத்திராடம் நட்சத்திர முதல் பாதத்தில் 2.5.20 முதல் 16.7.20 வரை சனிபகவானின் வக்கிர சஞ்சாரம் இருப்பதால் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர வாய்ப்புண்டு.

பரிகாரம் : சனிக்கிழமை அன்று கோயம்புத்தூரின் அருகே உள்ள இருளர்பதியில் உள்ள ஸ்ரீ சுயம்பு  பெருமாலை துளசி மாலை அணிவித்து   வழிபட்டு  வர வேண்டும்