சனிபகவான் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 2020 டிசம்பர் 27ஆம் தேதி தனுசு ராசியிலிருந்து தனது சொந்த வீடான 10ஆம் வீட்டிற்கு அதாவது மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகி பலம் பெறுகிறார். இவர் இரண்டரை ஆண்டுகள் இந்த ராசியில் இருப்பார்.

இந்த சனிப்பெயர்ச்சியால மிக அதிக நன்மையடையப்போகிறவர்கள், ரிஷபம் (ஏனெனில் பாக்கியாதிபதி பலம் பெறுகிறார் மற்றும் அஷ்டம சனி விலகுகிறார்), விருச்சிகம் (ஏனெனில் ஏழரைச் சனியிலிருந்து விடுபடுகிறார்கள்), கன்னி (ஏனெனில் அர்த்தாஷ்டம சனியிலிருந்து விடுபடுகிறார்கள்), சிம்மம் (ஏனெனில் சனி மறைவிடத்தில் அமர்கிறார்), மீனம் (ஏனெனில் லாபஸ்தானத்துக்கு வருகிறார்).

சற்று ஜாக்கிரதையாய் இருந்து பரிகாரங்களை கவனத்துடன் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் மிதுனம் (ஏனெனில் அஷ்டம சனி), துலாம் (ஏனெனில் அர்தாஷ்டம சனி), மகரம் (ஏனெனில் ஜென்மசனி), கும்பம் (புதிதாக ஏழரைச்சனி துவங்கவிருக்கிறது).

சனிபகவான் நீதிமான் என்பதை நீங்க அறிவீங்க. சனியினால் சங்கடம் ஏற்படுமோ என்று  யாரும் பயப்பட வேண்டாம். அவர் எல்லோருக்குமே தண்டனை தர மாட்டார்.  தவறு செய்பவர்களை மட்டுமே தண்டிப்பார். சிலருக்கு அனுபவப் படிப்பினைகளை கொடுத்து செம்மைப்படுத்தி வாழ்வில் உயர்த்துவார் சனிபகவான்.

மேலும் தற்சமயம் நடக்கக் கூடிய தசாபுக்தி மற்றும் அந்தரம் அனைத்து கிரகங்களின் கோட்சார நிலை ஆகியவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபடும் என்பதால் பயப்பட தேவையில்லை. சனி ஆட்சி பலம் பெறுவதால், உழைப்போருக்கு உயர்வு ஏற்படும்.  அந்நிய மொழி பேசும் நாடுகளில் உள்ளோர் அதிக நற்பலன் பெறுவர். இரும்பு, எண்ணை, வாகனங்கள் போன்ற துறைகள் வளம் பெறும். ஊழியம் செய்வோரும் உழைப்போரும் உயர்வு  பெறுவர்.

சனி பகவானுக்கான பரிகாரங்கள் (பிரீதிகள்) : எள் தீபம் ஏற்றுதல், காகத்துக்கு தினமும் சாதம் வைத்தல். இரும்பு விளக்கில் நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றுதல், கருப்பு நாய்க்கு உணவு படைத்தல், ஏழை எளியோருக்கு உணவு அளித்தல், நீல நிறப் பொருட்கள் மற்றும் உடைகளை தானம் செய்தல், எள்ளால் செய்த இனிப்பு விநியோகம் செய்தல், திருநள்ளாறு, குச்சனூர் சென்று வழிபடுதல், சனிக்கிழமைதோரும் அனுமனுக்கு விளக்கேற்றி, அர்ச்சனை செய்து மாலை சாற்றி வெள்ளை சாற்றி வழிபடுதல் அனுமான் சாலீசா சொல்லுதல் ஆகியவை சிறந்த சனிப்ரீதிகள் ஆகும்.

மகரம்

உத்திராடம்,2,3,4: சனியின் தனிப்பட்ட குணமான பிடிவாதம் உங்களுக்கு அதிகரிக்கும். எதிலும் வளைந்துகொடுக்க மாட்டீர்கள். சனியின் பார்வை உடல், மனம் இரண்டையும் இறுக்கமாக்கும் என்பது விதி. இப்பெயர்ச்சி அவசியமே இல்லாமல் கற்பனைக்  கவலைகளைக் கொடுத்து மனத்தையும் உடலையும் அலைக்கழிக்கும் என்பதால், சகல விஷயங்களிலும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். ஒரு புதிய உத்வேகம் தரும் சூழலில் அடியெடுத்து வைக்க இருக்கிறீர்கள்.

திருவோணம்: சிலருக்கு ஆன்மிக உணர்வுகள் அதிகமாகும். வெகுநாள்களாக தரிசிக்கவேண்டும் என்று நீங்க மனத்தின் நினைத்திருந்த தலங்களுக்குச் சென்று திருப்தியுடன் வழிபட்டு வருவீங்க. ஞானிகளின் ஆசியும் அவர்களின் தொடர்பும் கிடைக்கும் ஜன்மச் சனியாயிற்றே என்று கலங்கவேண்டாம். இனி, நிம்மதி பிறக்கும். மதிப்பு மரியாதை கூடும். பிறந்த ஜாதகப்படி யோகமான தசாபுக்திகள் உங்களுக்கு நடக்குமாயின், எதிர்கால வெற்றிக்கான அஸ்திவாரட்தை இப்போதே அமைப்பீங்க. சனி அதற்கு உதவுவார்.

அவிட்டம்,1,2: எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். அதிக வட்டிக்கு வாங்கி இருந்த கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீங்க. ஜன்மச் சனி என்பதால், உடல் ஆரோக்கியத் தில் மட்டும் கவனம் தேவை. வாழ்க்கைத் துணை வழியில் செலவுகள் ஏற்படும். சிலர் உங்களைப் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வாங்க. கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்கள் கடன் சிக்கலில் இருந்து விடுபடுவீங்க.

கும்பம்

அவிட்டம், 3,4: திடீர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீங்க. வீடு கட்டும் பணிக்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். தடைப்பட்ட காரியங் களை விரைந்து முடிப்பீங்க. கம்பீரமாகப் பேசி மற்றவர்களைக் கவருவீங்க. மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீங்க. போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும் நீங்கிடுங்க.

சதயம்: கணவன் – மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கிடுங்க. பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி நடந்துகொள்வாங்க. சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீங்க. வழக்கு களில் சாதகமான திருப்பம் ஏற்படும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். தடைகள் விலகி, நடப்பவை அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும்.

பூரட்டாதி,1,2,3: தடைப்பட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீங்க. வாகனப் பழுது சரியாகும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்கவேண்டாம். மற்றவர்களுடன் அளவோடு பழகவும். பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளவும். கடந்த காலங்களில் மகன்-மகளால் ஏற்பட்ட மன வருத்தங்களும் நீங்கிடுங்க. மகனுக்கோ, மகளுக்கோ. இருந்து வந்த தடை,தாமதங்கள் நீங்கி வாழ்வு வளம் பெறும். பணிபுரியும் இடங்களில் நிம்மதி பிறக்கும்; மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்

மீனம்

பூரட்டாதி, 4: அரசியல்புள்ளிகள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் – மனைவி இருவரும் கலந்து பேசி, குடும்பச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீங்க. சிலர் புது வீடு வாங்குவீங்க. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்திக் காட்டுவீங்க. மனஅழுத்தத்தில் தவிப்பதைத் தவிருங்கள். குடிப் பழக்கம் இருப்பவர்கள் அந்தப் பழக்கத்தை நிறுத்துவது அவசியம். வம்பு, வழக்குகள்

உத்திரட்டாதி:   மகனுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி மற்றும் உத்யோகம் அமையும். சகோதரியின் திருமணம் கூடி வரும். பழைய நகைகளை மாற்றிப் புது டிசைனில் நகை வாங்குவீங்க. பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீங்க. அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் கிடைக்கும். நன்மைகளே நடக்கும். இருந்த இடம் தெரியாமல் இருந்த நீங்க, இனி விஸ்வரூபம் எடுப்பீங்க. போட்டிகளில் வெற்றி பெறுவீங்க. கலைத்துறையினரே! முன்னணிக் கலைஞர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.

ரேவதி:   மாணவ- மாணவிகள் பாடங்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வீங்க. தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகரிக்கும். விளையாட்டுகளில் பதக்கம் வெல்வீங்க. கலைத்துறையினர் கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவீங்க. சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். தேவையற்ற, ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பழக்கவழக்கங்களிலிருந்தும் கூடா நட்புகளிடமிருந்தும் விலகி, மனத்தை நல்லவிஷயங்களில் திசை திருப்ப ஆரம்பிச்சிருப்பீங்களே. சபாஷ். பொது நிகழ்ச்சிகளில் தலைமை வகிக்கும் அளவுக்குப் பிரபலமடைவீங்க.

முற்றும்.