மும்பை: 
ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க சமந்தா  மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா, அதற்கு முன் கவுதம் மேனன் இயக்கிய ‘ஏ மாயா சேசாவே’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2010 ம் ஆண்டு திரையுலகில் காலடி எடுத்துவைத்த சமந்தா, அந்த படத்தில் தன்னுடன் கதாநாயகனாக நடித்த நாகசைதன்யா-வை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தெலுங்கு மற்றும் இந்தியத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த நாகேசுவர ராவ் மகனான நாகார்ஜுன் மற்றும் அமலா தம்பதியின் மகனான நாகசைதன்யாவை 2017 அக்டோபர் மாதம் கரம் பிடித்தார் சமந்தா.
திருமணத்திற்குப் பின், தனது பெயருக்குப் பின்னால் தனது கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனி-யை இணைத்துக் கொண்டு சமந்தா அக்கினேனி என்று வலம் வந்தார்.
நாகசைதன்யாவுடன் சமந்தாவுக்கு மண முறிவு ஏற்பட்டதாகக் கடந்த சில மாதங்களாகச் செய்திகள் பரவின.  இதுகுறித்து இருவரும் மவுனம் காத்துவந்த வந்தனர்.
இந்நிலையில், நாகசைதன்யாவுடன் இனி சேர்ந்து வாழப் போவதில்லை என்று சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார், இதனைத் தொடர்ந்து நாகசைதன்யாவும் தான் இனி சமந்தாவுடன் சேர்ந்து வாழப் போவதில்லை என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், நாக சைதன்யா குடும்பத்தினர் அளிக்க வந்த ரூ. 200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க நடிகை சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட தனக்குத் தேவையில்லை என்று தெரிவித்ததாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.