நாக சைதன்யாவுடனான திருமணம் முறிந்த நிலையில், புதிய படங்களை அதிகளவில் ஒப்புக் கொள்கிறார் நடிகை சமந்தா .

தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதேபோல் ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிக்கும் தெலுங்கு, தமிழ் படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார். இவை தவிர இந்திப் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் தனது சம்பளத்தை 4 கோடிகளாக சமந்தா உயர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகை சமந்தா எனவும் கூறப்படுகிறது.