சென்னை: தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் உள்ளதாக கூறி சர்ச்சையை கிளப்பிய சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் சாம் பிட்ராடோ கூறிய கருத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் கட்சி முறித்துக்கொள்ளுமா என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் கூறிய தமமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், செல்வபெருந்தகை,  தென்னிந்தியர்கள்  குறித்த சாம் பிட்ரோடா கருத்துக்காக  கூட்டணியை முறிக்க சொல்வதாக என கொந்தளித்துள்ளார்.   மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்து உள்ளார்.

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா, ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவரின் ஆலோசகராக இருந்தார். 2004 தேர்தலில் யுபிஏ (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) அரசு ஆட்சி அமைத்த போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், பிட்ரோடாவை இந்திய தேசிய அறிவு ஆணையத்தின் தலைவராக ஆக்கினார். கடந்த 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங்குக்கு பொது உள்கட்டமைப்புக்கான ஆலோசகராக இருந்தார். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விவாதப்பொருளாகி விடுவார். இந்த நிலையில், தற்போது அவர் தென்னிந்தியர்கள் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், சாம் பிட்ரோடாவின் கருத்து அவரது சொந்த கருத்து என்று கூறிய அகில இந்திய காங்கிரஸ் தலைமை அவரது கருத்து துரதிருஷ்டவசமானது என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,  சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, ராஜினாமா செய்துள்ளார். 

இந்த நிலையில்,   தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் இருக்கிறார்கள் என்று கூறியதாக ஒரு கருத்தை வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவை முறிக்க தி.மு.க. தயாரா என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்திருக்கிறார். எதற்கு எதை முடிச்சு போடுவது என்று தெரியாமல் அரசியல் உள்நோக்கத்தோடு கருத்துகளை திரித்து பேசுவது மோடியின் கை வந்த கலையாக இருக்கிறது. அதை ஒவ்வொரு கட்டத்திலும் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து முறியடித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக் காவில் வாழ்கிற சாம்பிட் ரோடா ஏற்கனவே தெரிவித்த ஒரு கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பை வெளியிட்டது. அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இக் கருத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என மறுப்பு கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் பொறுப்பிலிருந்து சாம்பிட்ரோடா விலகிக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவரது கருத்தை காங்கிரஸ் கட்சி முழுமை யாக நிராகரித்திருக்கிறது. இதற்கு பிறகும் இக்கருத்தின் அடிப்படையில் சவால் விடுவது அரசியல் நாகரீக மற்ற செயலாகும். இதை வன்மையாக கண்டிக்கிறேன். இதையும் படியுங்கள்: விஜய் பிறந்த நாளையொட்டி மதுரையில் ஜூன் 22-ந் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு அமெரிக்க குடியரசு தலைவராக பராக் ஒபாமா 2010-ல் இந்தியாவுக்கு வருகை புரிந்த போது, அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கை சந்தித்து இந்தியாவில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கு எதிராக வளர்ந்து வருகிற அச்சுறுத் தலையும், அதன்மூலம் இந்து தேசியவாதத்தை பா.ஜ.க. வளர்ப்பதையும் கவலையோடு பகிர்ந்து கொண்டதை இங்கு நினைவு கூறுவது அவசியமாகும். அன்று பராக் ஒபாமா எதை கண்டு அச்சம் தெரிவித்தாரோ அத்தகைய அச்சத்தை 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் மூலம் நாடு முழுவதும் தீய பிரசாரம் பரப்பப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் தோற்பது உறுதியாகியதை முற்றிலும் உணர்ந்து விட்ட மோடி, மக்களை பிளவு படுத்துவதற்கு இல்லாததை எல்லாம் இட்டுக் கட்டி அப வாதங்களை கூறி வருகிறார்.

10 ஆண்டுகால ஆட்சியின் மூலம் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத ஆட்சியினால் ஏற்பட்ட பாதிப்புகளை மூடி மறைப்பதற்கு வகுப்புவாத, நச்சு கருத்துகளை பரப்பி மக்களை பிளவுபடுத்தும் மோடியின் முயற்சியை காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் களத்தில் நின்று போராடி மக்கள் மன்றத்தில் முறியடித்து வருகிறார்கள். இவர்களது கடும் பரப்புரையினால் வகுப்புவாத மோடி ஆட்சி வீழ்த்தப்பட்டு, மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது. இதன்மூலம் மக்களவை தேர்தலுக்கு பிறகு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நல்லாட்சியை இந்தியா கூட்டணி அமைப்பதை நரேந்திர மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது  என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சாம் பிட்ரோடா கூறிய கருத்து குறித்து கண்டனம் தெரிவித்து பேசிய பிரதமர்,  குடியரசு தலைவர்  “திரெளபதி முர்முவின் கறுப்பு நிறம் காரணமாகவே அவரை குடியரசு தலைவர் தேர்தலின் போது காங்கிரஸ் தோற்கடிக்க முயன்றது என்று இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. எனது நாட்டில் தோலின் நிறத்தினை வைத்து மக்களின் திறமையினை தீர்மானிக்க முடியுமா?.

தோலின் நிறத்தினை வைத்து விளையாட இளவரசருக்கு யார் அனுமதி கொடுத்தது. நான் இன்று மிகவும் கோபத்தில் இருக்கிறேன். என்னை யார் அவதூறாக பேசினாலும் நான் கோபப்படுவதில்லை. அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் இளவரசரின் தத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ள மிகப் பெரிய அவதூறு என்னுள் கோபத்தை நிரப்பியுள்ளது.

தேர்தல் பிரசாரங்களில் அரசியல் சாசனத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள். பிறகு நாட்டு மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிக்கிறார்களா?. இதை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. இதுகுறித்து இளவரசர் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும். இளவரசரின் மாமா அமெரிக்காவில் வசிக்கிறார் என்று இன்றுதான் நான் அறிந்து கொண்டேன். அந்த மாமா அவரின் தத்துவ ஆலோசகர் மற்றும் வழிகாட்டியுமாவார். இளவரசரின் அந்த வழிகாட்டி இன்று மிகப் பெரிய ரகசியத்தை இன்று உடைத்துள்ளார். கருமையான நிறம் கொண்டவர்கள் அனைவரும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது அவர் நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களை தோலின் நிறத்தினை வைத்து அவமதித்துள்ளார். தோலின் நிறம் என்னாவாக இருந்தால் என்ன? நம்மைப் போல தோல் நிறம் கொண்ட கடவுள் கிருஷ்ணரை நாட்டு மக்கள் வணங்குகின்றனர்’ என்றார்.

பின்னர்,  தெலங்கானா மாநிலம் வாராங்கல் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, சாம் பித்ரோடாவின் கருத்து குறித்து காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் சில கேள்விகளை எழுப்பினார்.  சாம் பிட் ரோடா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் தமிழர் பெருமையை காக்கும் வகையிலும் காங்கிரஸ் உடனான உறவை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முறித்துக்கொள்ள தயாரா? சாம் பித்ரோடாவின் கருத்து மகாராஷ்டிர மாநில மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? காங்கிரஸ் கட்சி நாட்டை பின்னோக்கி இழுத்துச்செல்லத் துடிக்கிறது. அத்தகையவர்களுடன் சேர்ந்து பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி மாநிலத்திலுள்ள மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்தது எனப் பேசினார்.

இதையடுத்து காங்கிரஸ் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக பிட்ரோடா கூறியிருக்கும் ஒப்புமை துரதிருஷ்டவச மானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த ஒப்புமைகளில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தன்னை விலக்கிக் கொள்கிறது. மேலும் தனது பதவியில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருக்கிறார். தலைவர் கார்கேவும் ஏற்றுக்கொண்டு விட்டார். இந்த முடிவு அவரின் சொந்த விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நேரத்தில் சாம் பிட்ரோடாவின்  சர்ச்சை பேச்சு காங்கிரஸூக்கு தலைவலியை கொடுத்து இருக்கிறது.