ஜெய்ப்பூர்:

மான்களை வேட்டையாடிய  வழக்கில் இருந்து விடுதலையான பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் மீது, ராஜஸ்தான் அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது.

இந்த  வழக்கில் சல்மான்கான் விடுவிக்கப்படுவாரா என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பிரபல இந்தி நடிகரான சல்மான்கான்  1998-ம் ஆண்டு  ராஜஸ்தான் மாநிலத்தில் படிப்பிடிப்பின் இடைவேளையின் போது, அந்த பகுதியில் உள்ள காட்டுக்கு சென்று, தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மானை வேட்டை யாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அவருடன் நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் சென்றதாக கூறப்பட்டது.

20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சல்மான் கான் மான் வேட்டை ஆடியதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் விடுதலை செய்தது.

இதையடுத்து, ராஜஸ்தான் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இநத வழக்கு மீண்டும் நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

. தீர்ப்பையொட்டி பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சாயிப் அலிகான் உள்ளிட்டோர் கோர்ட்டில் ஆஜரகா உள்ளனர்.