உலக புகழ்பெற்ற சேலம் குகை ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன் ஆடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

நேற்று தீ மிதி திருவிழா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்றிரவு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.