சென்னை:  சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநாடு  தேதி மாற்றப்படுவதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுகவின் இரண்டாவது இளைஞரணி மாநில மாநாடு வரும் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் டிசம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை – வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, மழை – வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், வருகிற 17-12-2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட “தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு” தேதி மாற்றப்பட்டு, வருகிற 24-12-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.