ஆர்லியன்ஸ்: பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஆர்லியன்ஸ் பாட்மின்டன் தொடரின் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்.

பிரான்ஸ் நாட்டின் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால். எனவே அவர் இத்தொடரில் வெற்றிக் கோப்பையை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அரையிறுதியில், டென்மார்க் நாட்டின் லைன் கிறிஸ்டோபெர்சனை எதிர்கொண்டார் சாய்னா நேவால். இதில், முதல் செட்டை 17-21 என்ற கணக்கில் பறிகொடுத்தார் சாய்னா நேவால். எனவே, இரண்டாவது செட்டில் எழுச்சி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இரண்டாவது செட்டையும் 17-21 என்ற கணக்கிலேயே இழந்தார் சாய்னா. இதனால், போட்டி அவரின் கையை விட்டுப் போனதோடு, கோப்பையும் கை நழுவியது. இந்தப் போட்டி மொத்தம் 28 நிமிடங்கள் நீடித்தது.