புனே: இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில், நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவந்து பன்ட்-பாண்ட்யா ஜோடி பிரிந்தது. 78 ரன்கள் அடித்த நிலையில், ஆட்டமிழந்து வெளியேறினார் பன்ட்.

தற்போது, அரைசதம் அடித்து ஆடிவரும் ஹர்திக் பாண்ட்யாவுடன், அவரின் சகோதரர் கருணால் இணைந்துள்ளார். ரிஷப் பன்ட், 62 பந்துகளில் 4 சிக்ஸர்கள் & 5 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் அடித்தார் பன்ட். சாம் கர்ரன் பந்தில், கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தற்போது ஹர்திக் பாண்ட்யா, 39 பந்துகளில் 4 சிக்ஸர் & 4 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார். 40 ஓவர்கள் வரையாவது தாக்குப்பிடித்து ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோடி, திடீரென பிரிந்த நிலையில், இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.