டெல்லி: 2021ம் ஆண்டைய சாகித்ய அகாடமியின் பரிசுக்கு பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிறந்த மொழிப்பெயர்பாளருக்கான  விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 20 மொழிகளில் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதானது இந்திய மொழி எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய விருதாக கவுரவிக்கப்படுகிறது.

அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருதுகள் விவரம் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. பல்வேறு இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் வெளியான மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. தமிழ் மொழிக்கான விருதுக்கு மூத்த எழுத்தாளர் மாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி கடநத் 2021ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமியின் பரிசுக்கு எழுத்தாளர் மாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாலன் எழுதிய ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் நூலுக்கு மொழிபெயர்ப்புக்கான பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

பார்சி சமூகத்தில் பிணம் தூக்கும் பணிகளை செய்யும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பற்றி பேசும் ‘Chronicle of a Corpse Bearer’ என்ற ஆங்கில நாவலை, பிரபல இந்திய நாடக ஆசிரியர் சைரஸ் மிஸ்திரி எழுதியுள்ளார். பல விருதுகளைப் பெற்றுள்ள இந்தநாவல், 2015-ம் ஆண்டின் சிறந்த ஆங்கில இலக்கிய நூலுக்கான சாகித்ய அகாடமி பிரதான விருதையும் பெற்றுள்ளது.

மொழி பெயர்ப்புக்கான் விருது பெறுபவர்களுக்கு,  தாமிர பட்டயம் மற்றும் ரூ.50000 ரொக்கம் அளிக்கப்படும். விருது வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.