சென்னை,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தில் சகாயம் ஐஏஎஸ் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.

இன்று மாலை திடீரென சென்னை மெரினா வந்த சகாயம் ஐஏஎஸ், அங்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வரும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுடன் கலந்துகொண்டு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இதன் காரணமாக மெரினாவில் போராடிவரும் இளைஞர்கள் மேலும் உற்சாகமடைந்து உள்ளனர்.