சபரிமலை:
பரிமலையில் நாளை மாலை நடை திறக்கப்படுகிறது.

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், கார்த்திகை ஒன்றாம் தேதி முதல், 41 நாட்கள் நடக்கும் பூஜை மண்டல காலம் ஆகும். இந்தாண்டு சீசனுக்காக நாளை மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

இந்த ஆண்டு, ‘ஆன்லைன்’ முன்பதிவு வாயிலாக தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்ய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.