ஐதராபாத்: 
தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 89.

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக நேற்று காலை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இருந்தாலும் அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்று இன்று அதிகாலை காலமானார் கிருஷ்ணா. அவருக்கு வயது 79 . அவரது இறப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரியில் மகேஷ்பாபுவின் சகோதரரும், செப்டம்பர் மாதம் தாயாரும் உயிரிழந்த நிலையில் தந்தை கிருஷ்ணாவும் உயிரிழந்துள்ளது பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது