கொடோனா ஊரடங்கில் விதியை கடைபிடிக்கவில்லை என தந்தை மகன் இருவரை போலீஸார் சிறையில் அடித்து கொன்றனர். அது குறித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு:

சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும் அதனை சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் இந்நிலை நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை நம்முடைய விதைத்திருக்கிறது. ரத்தம் சொட்ட சொட்ட இருவரையும் தாக்கும் மூர்க்கத் தனம் கொலை பாதகச் குற்றம். அதைச் செய்தவர் எவராக இருந்தாலும் அந்த தவறுக்காக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கின்ற குரல்களுக்கு இடையில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதை பார்க்கும் போது அரசு இந்த விஷயத்தில் துளிகூட உண்மை தன்மையை கண்டறிய முயலவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
நான் தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் நினைத்தால் இரண்டு கைதிகளை காவல் நிலையத்தில் இருந்து சிறைச்சாலைக்கு மாற்றிவிட முடியுமா? அவ்வாறு செய்ய எத்தனை துறைகள் அவர்களுக்கு உதவி இருக்க வேண்டும். எத்தனை பேர் உடன் இருந்திருக்க வேண்டும் அந்த உண்மைகளை ஆராயாமல் பெயரளவில் எடுக்கப்படும் நடவடிக்கை எதற்கும் உதவாத ஒன்று என்பது அரசுக்கு புரியவில்லையா? அல்லது இது போதும் என்று அரசு நடக்கிறதா?
இறந்தவர்களின் குடும்பத் திற்கு நிதி உதவியும் நிவாரணம் தேவைதான் ஆனால் அதை மட்டும் அவசரமாக அறிவித்து விட்டு இந்த கொலைகளை முதல்வர் நடந்துவிடக்கூடாது நிதி உதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை. இந்த கொலை யில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கொலையை செய்தவர்கள் அதற்கு துணை நின்றவர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள் இதை மறைக்க முயன்றவர்கள் என என பலருக்கு இந்த கொலையில் பங்கு உண்டு. இரண்டு அப்பாவிகளின் குருதி படிந்த காவல்து றையை சுத்தம் செய்ய அரசு என்ன செய்யப்போ கிறது. இவை அனைத்திற்கும் மேலாக காவல் துறையின் கொலைகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அரசும் அந்த காவல்துறையை ஏவி மக்களை நசுக்கும் முதல்வரும் இதில் முதல் குற்றவாளிகள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் அடக்குமுறையை செயல்படுத்தும் கரமாக காவல் துறை செயல்பட்டு 13 உயிரைக் குடித்தது யார்? எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை அரசு அலட்சியம் காட்டி மனித உயிர்களின் மதிப்பை உரிமைகளையும் காற்றில் பறக்க விட்டது. இப்போது அதே காவல்துறையின் கரங்கள் இரண்டு உயிர்களை குடித்து விட்டது. அரசு தன் விசுவாசமான கரத்தை காக்கும் வேலையைச் செய்யப் போகிறதா அல்லது சரியான சரியானதை செய்யப் போகிறதா?
இவ்வாறு கமல்ஹாசன் அறிக்கையில் கூறி உள்ளார்.