சென்னை: ரூ.662 கோடி நகராட்சி திட்ட திட்டப்பணிகளை தெடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்,  ரூ.130.20 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம, பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி  தொடங்கி வைத்தார்.

அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.662.22 கோடி மதிப்பீட்டிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

அதையிடுதது, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம்,க ழனிவாசல் திட்டப்பகுதியில் ரூ.130.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 900 அடுக்குமாடிக் குடியிருப்பு பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மேலும்,ரூ.2 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டில் கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 6 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்களையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.