சென்னை:
மிழகத்தில் அமலில் உள்ள 15 நாள் முழு ஊரடங்கு காரணமாக கிட்டதட்ட 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதனால் எதிர்கால அரசின் செலவினங்களில் கடும் பாதிப்பை இந்த ஊரடங்கு ஏற்படுத்தக் கூடும். மே 24ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால், அரசுக்கு டாஸ்மாக் மது பான விலையை ஏற்றுவது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள நேரிடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக மது பான விலைகள் உயர்த்தப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரிகள் வருகை குறைந்து 500 டன் காய்கறிகள் அழுகிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.