திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே டிடிவி தினரகனின் அம்மா மக்கள் கட்சி நிர்வாகி  வீட்டில் இருந்து பெட்டி பெட்டியாக ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு  ரூ 2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் என்று காவல்துறை தெரிவித்து உள்ளது.

திண்டுக்கல் அருகே உள்ள சரஸ்வதி நகரில் இருப்பவர் ஓ. ஜே. பாண்டி. இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திண்டுக்கல் வடக்கு பகுதி கழகச் செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் ஏராளமான  அரசு   மதுபான பாட்டில்கள் பதுக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவரது வீட்டில் பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1600 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் என்று காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

விடுமுறை தினங்களிலும், காலை நேரங்களிலும் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக அவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஓ.கே. பாண்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.