சென்னை

மிழகத்தில் கடந்த 38 நாட்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து காவல்துறையினர் ரூ.19.24 கோடி அபராதம் வசூல் செய்துள்ளனர்.

நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  நேற்று வரை சுமார் 16 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதில் 17,670 பேர் உயிர் இழந்து 13.61 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2.19 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர்.  கொரோனாவை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  காலை வேளைகளில் மட்டும் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   அந்த நேரத்தில் முகக் கவசம் அணிவதும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் உத்தரவு இடப்பட்டுள்ளது.  இந்த உத்தரவை மீறுவோரை காவல்துறையினர் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 8 முதல் நேற்று முன்தினம் வரை அதாவது 38 நாட்களில் தமிழகத்தின் வடக்கு மண்டலத்தில் 1,76,113 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.  இதைப் போல் மத்திய மண்டலத்தில் 1,29,746 பேர் மீதும், மேற்கு மண்டலத்தில் 1,58,144 பேர் மீதும், தெற்கு மண்டலத்தில் 3,23,079 பேர் மீதும், நகர்ப் புறங்களில் 1,75,051 பேர் என மொத்தம் 9,62,133 பேர்  மீது தமிழக காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவர்களிடம் அபராதமாக ரூ.19 கோடியே 24 லட்சத்து 26 ஆயிரத்து 600 வசூலித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத நபர்கள் மீது கடந்த 38 நாட்களில் மட்டும் 33,566 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.1 கோடியே 67 லட்சத்து 83 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.