டெல்லி: இந்தியாவில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி, அபுதாபியில் உள்ள ஒரு உணவகம் மூலம்  ரூ.120 கோடி ஹவாலா முறையில் பணத்தை சேர்த்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, என்ஐஏ அமைப்பினர் தமிழ்நாடு, கேரளா உள்பட நாட்டின் 13 மாநிலங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. குறிப்பாக தடைசெய்யப்பட்ட சிமி உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாக இந்தியாவில் பல்வேறு அசம்பாவி தங்கள் நடைபெற காரணமாக இருந்ததாக பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் 106 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ் நாட்டிலும் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் பல இடங்களில் இந்த அமைப்பைசேர்ந்தவர்கள், வன்முறையில் ஈடுபட்டனர். பெட்ரோல் குண்டுகளை வீசி, தாங்கள் பயங்கரவாதி அமைப்பை சேர்ந்த வன்முறையாளர்கள்தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.

இந்த நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  ஹவாலா முறையில் ரூ.120 கோடி சேர்த்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. கடந்த வாரம் என்ஐஏ உடன் சேர்ந்து அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது, கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் முகமது சபீக் பயத் கைது செய்யப்பட்டார். மொத்தம் 106 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஹவாலா முறையில் ரூ.120 கோடி சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளதாக  அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக லக்னோவில் உள்ள பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதி மன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்டவை சட்டவிரோத செயல்பாடு களுக்கு நிதி திரட்டி அதனை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளது. இது, அந்த அமைப்பின் தலைவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ரூ.120 கோடி வரை வங்கிகளில் டெபாசிட்டாக வைத்துள்ளது. இதில் பெரும் பகுதி ரொக்கமாகவே உள்ளது. சதி நடவடிக்கைகளுக்காக இந்த அமைப்பு சந்தேகத்துக்குரிய நபர்களிடமிருந்து உள் நாட்டிலும், வளைகுடா நாட்டிலுமிருந்து இந்த நிதியை திரட்டி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற பணம் ஹவாலா முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த ஹவாலா பண பரிமாற்றம் அனைத்தும் அபுதாபியில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றுள்ளது  அப்துல் ரசாக் என்ற நிர்வாகி மூலம் இந்த உண்மைகள் தெரிய வந்துள்ளது. அப்துல் ரசாக் அபுதாபியில் பணம் திரட்டி உள்ளார். இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கத்தார் நாட்டில் பணம் திரட்டும் பணிகளை பாப்பு லர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிறுவனங்களில் ஒருவரான பயாத் என்பவர் மேற்கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. கட்சிக்கு பணம் திரட்டுவதில் மூளையாக செயல்பட்டவர்கள் வளைகுடா நாடுகளில் பல்வேறு வழி களில் பணம் திரட்டி உள்ளனர். இது தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் போலியான நன்கொடை ரசீதுகளை உருவாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி கலவரங்களின் பின்புலத்தில் இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளது. மேலும், வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர் குலைப்பதற்காக ஹத்ரா சுக்குச் சென்றபோது 4 பேரை உத்தரபிரதேச காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன், வகுப்புவாத கலவரங்களை தூண்டி, ஒற்றுமையை குலைக்கும் நோக்கத்துடன் உத்தர பிரதேசத்தில் உள்ள பல முக்கிய நபர்கள் மற்றும் முக்கிய இடங்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேகரிக்கும் பணிகளிலும் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.

தேசத்தின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை சீர் குலைக்கும் வகையில், பிரதமர் மோடியின் பாட்னா வருகையின் போது இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் பயங்கரவாத குழுக்களை உருவாக்க அந்த அமைப்பு திட்டமிட்டிருந்தது என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.