சென்னை: அரக்கோணம் அடுத்த சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் அமைப்ப தற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு, திட்ட பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டினார்.

சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கம்பிவட ஊர்தி அமைவிடத்தில் (முதல் திட்டமாக) ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிக்கு இன்று (13.12.2021) அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில்  அமைச்சர்  ஆர்.காந்தி, அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் .முனிரத்தினம் பங்கேற்றனர்.