சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி)  45வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

ஆண்டுதோறும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் புத்தக கண்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதுவரை 44 கண்காட்சிகள் முடிவடைந்த நிலையில்,  45-வது புத்தகக் கண்காட்சி 2022ம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜனவரி 23 வரை நடைபெற உள்ளது. இந்த தகவலை அறிவித்துள்ள தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி)  புத்தக கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவித்து உள்ளது.

புத்தக கண்காட்சியானது  வாரநாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை வரையிலும்  நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.