சென்னை: அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் ஒரு கால பூஜை திட்ட அர்ச்சகர்களுக்கு உதவி தொகை ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  விடுப்பட்ட பெயர்களை இணையதளத்திலோ, போனிலோ தெரிவிக்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்து அறநிலையத்துறையின் சார்பில், கோவில்களில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயனடையும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளின் விவரங்கள் இணைதளத்தில் வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறவில்லை என கருதும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி 044-28339999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, அலைபேசி எண் மற்றும் பணிபுரியும் திருக்கோயில் பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கலாம் .

விவரங்கள் சரிபார்க்கப்பட்டு விடுப்பட்ட பெயர்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் முழு விவரம் காண அருகே உள்ள லிங்க கிளிக் செய்யுங்கள்:  Temple archakar list-23-10-21