சேலம் :

ரிவாளால் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி பரபரப்பு ஏற்படுத்திய ரவுடி பினுவின் முக்கிய எதிராளியான ரவுடி ராதாகிருஷ்ணன் சேலம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

ரவுடி பினுவின் எதிர்கோஷ்டியைச் சேர்ந்தவரான ராதாகிருஷ்ணன் சென்னை அரும்பாக்கைத்தை சேர்ந்தவன். இவன்,  ரவுடி பினுவை கொலை செய்ய திட்டமிட்டு வந்ததாக பிடிபட்ட ரவுடிகளிடம் நடத்தி விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து,  அவனை சுட்டுப்பிடிக்க தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று சேலம் நீதி மன்றத்தில் சரண் அடைந்தார்.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள மலையாம்பாக்கத்தில் கடந்த 8ந்தேதி அன்று இரவு  ரவுடி பினு தனது பிறந்தநாளை, அரிவாளால் கேக்கை வெட்டி பிறந்தநாளை வெகு விமரிசையாக  கொண்டாடினார். இதில் ஏராளமான ரவுடிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் ரவுடிகளை சுற்றி வளைத்தனர். இவர்களில் பலரை கைது செய்தனர். ஆனால் ரவுடி பினு தப்பியோடி தலைமறைவானார்.

அவரை சுட்டுப்பிடிக்க போலீசார் தேடி வந்த நிலையில் ரவுடி பினு போலீசாரிடம் சரணடைந்தார். இந்நிலையில், ரவுடி பினுவை போட்டுத்தள்ள, எதிர்கோஷ்டியை சேர்ந்த ரவுடி ராதாகிருஷ்ணன் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், தலைமறைவான ரவுடி ராதாகிருஷ்ணனை சுட்டுப்பிடிக்க தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ரவுடி ராதாகிருஷ்ணன் மீது 9 கொலை வழக்கு உள்பட 35க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.