சென்னை:

டந்த 14ந்தேதி காஷ்மீர் புல்வாமா பயங்கவாத வெடிகுண்டு தாக்குதலில்  வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு நேரில் சென்று  ஆறுதல் கூறிய ரோபோ சங்கர் ரூ.1 லட்சம் நிதி உதவி அளித்தார்

கடந்த 14ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்  ஜெய்ஷ் இமுகமது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப்பபடை பயங்கரவாதி  வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது மோதி  தாக்குதல் நடத்தியதில் 44 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், ஏற் படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட வீரர்களில் 2 பேர்  தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஒருவர், கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், மற்றொருவர்  அரியலூர் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன்.

இவர்களின் குடும்பத்துக்கு  தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ள நிலையில், மேலும் பலர் உதவிகள் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில்,  பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கர், வீர மரணம் அடைந்த வீரர்களின் சொந்த ஊருக்கு நேரில் சென்று, வீரர்களின் குடும்பத்தினரை  சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில்,  தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.  மறைந்த வீரர்களுக்கும் அஞ்சலியும் செலுத்தினார்.

ரோபோ சங்கரின் மனிதாபிமானம் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.