திருநெல்வேலி

திருநெல்வேலி – திருச்செந்தூர் நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கி உள்ளது. 

சமீபத்தில் கனமழை பெய்ததால் தென் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.  குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் ம்க பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.   வெள்ள பாதிப்புப் பகுதிகளில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் குளங்கள் உடைப்பால் நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் கடுமையாகச் சேதமடைந்தன. எனவே 3 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேதமடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு நெல்லை-திருச்செந்தூர் இடையே பேருந்து, லாரி உள்ளிட்ட அனைத்து சாலைப் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது.