சென்னை:

நேற்று சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகம் எதிரே காமராஜர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர்கள் மாலை 3 மணிக்கு மேல் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், சாலை மறியல் செய்ததாக, சாலை மறியலில் ஈடுபட்ட   திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 75 திமுக எம்எல்ஏக்கள் மீது கோட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனுமதியின்றி ஒன்று கூடுதல், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கோட்டை காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.