சென்னை

சென்னை ஆர் கே நகர்  தொகுதி மக்கள் தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஆர் கே நகரில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக புகார் கிளம்பியது.   ஒரு ஓட்டுக்கு ரூ.10000 தருவதாகவும் அதற்கு டோக்கனாக ரூ.20 நோட்டு ஒன்று கொடுத்தாகவும் ஆனால் தேர்தல் முடிந்ததும் அவர் பணம் தரவில்லை எனவும் கூறப்பட்டது.

இநிலையில் ஆர் கே நகரில் ஒரு கோவில் விழாவுக்கு டிடிவி தினகரன் வந்தார்.   அவருக்கு எதிராக பொதுமக்களில் சிலர் போராட்டம் செய்தனர்.   ரூ. 20 நோட்டைக் கையில் பிடித்தபடி “20 ரூபாய் நோட்டு இங்கே.  10000 ரூபாய் எங்கே?” என கோஷம் எழுப்பி உள்ளனர்.

டிடிவி தினகரனை காவல்துறையினர் பத்திரமாக அழைத்துச் சென்றனர்.   அதன் பின் மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.