சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இன்று முதல் நாளில் 4 பேர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடைபெறுகியது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.

வேட்புமனு தாக்கல் செய்ய 5 பேர் மட்டுமே வரவேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.

முதல் நாளாக இன்று 4 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்றைய வேட்பு மனு தாக்கலின்போது, பத்மராஜன் 184வது முறையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல், தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி மட்டுமே தாக்கல் செய்ய முடியும். வேட்புமனு தாக்கல் செய்ய டிசம்பர் 4-ந் தேதி கடைசி நாள்.

இடைத்தேர்தலையொட்டி ஆர்.கே.நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.