புதுடெல்லி:

ஐபிஎல் போட்டியில் அரை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை ரியான் பராக் பெற்றுள்ளார்.


அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது ரியான்பராக் ராஜஸ்தான் ராயங் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல்-ல் 7 போட்டிகளில் விளையாடி 160 ரன்கள் எடுத்துள்ளார்.

இவர் லெக் பிரேக் பவுலராகவும் உள்ளார். இதுவரை 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ஆடிய ஆட்டம் தான் இவருக்கு முதல் போட்டி.
கடந்த 2018-ம் ஆண்டு 19 வயதுக்கு குறைவான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் பராக் இடம் பெற்றிருந்தார்.