புதுடெல்லி:

காங்கிரஸ் ஆட்சியில் 2 பேர் சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஜாரை ஐநா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் தீவிரவாதியாக அறிவித்தது.

இந்நிலையில், புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம், மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கான நடைமுறை கடந்த 2009-ல் தொடங்கப்பட்டது. அந்த நடைமுறை 10 ஆண்டுகள் கழித்து நிறைவடைந்துள்ளது.

ஹபீஸ் சயீத்தை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வைத்தது யார்? லக்வியை மறந்துவிட்டீர்களா? காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 2 பேர் சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர்.

எனவே, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட முதல் நபர் மசூத் அஜார் அல்ல என்றார்.