துபாய்: மாதந்தோறும் உலகளாவிய அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வுசெய்யும் திட்டத்தில், இந்தாண்டு ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய சார்பில் ரிஷப் பன்ட், இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் அயர்லாந்தின் பால் ஸ்டிர்ரிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் வர்ணனையாளர்கள், ரசிகர்கள், கிரிக்கெட் பத்திரிகையாளர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள், ஒளிபரப்பாளர்கள் என பலரும் ஆன்லைனில் வாக்களித்துச் சிறந்த வீரரைத் தேர்வு செய்வார்கள்.

மகளிர் பிரிவில் பாகிஸ்தான் வீராங்கனை டயானா பெய்க், தென்னாப்பிரிக்காவின் ஷாப்னிம் இஸ்மாயில், மரியாஜானே கேப் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ஆடவர், மகளிர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட 6 பேருக்கும் ஐசிசி, கிரிக்கெட் வர்ணனையாளர்கள், கிரிக்கெட் பத்திரிகையாளர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள், ஒளிபரப்பாளர்கள் எனப் பலரும் ஆன்லைனில் வாக்களித்து சிறந்த வீரரைத் தேர்வு செய்வார்கள். இவர்கள் அனைவருக்கும் 90% வாக்குகளும், ரசிகர்களுக்கு 10% வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.