சென்னை: இந்திய இன்னிங்ஸில், மூன்றாம் நாளில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் ஆடிய ஆட்டம் மிகவும் தனித்துவமானது என்று புகழ்ந்துள்ளார் அவரின் விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்தின் டாம் பெஸ்.

அந்த ஆட்டம் மிகவும் தைரியமானதும்கூட என்றும் குறிப்பிட்டுள்ளார் டாம் பெஸ்.

இந்திய அணி 73 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், புஜாராவுடன் இணைந்து அணியை கவுரவமான நிலைக்கு இட்டுச்சென்றார் பன்ட். அவர் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அசால்ட்டாக விளாசினார்.

அவர் கூறியுள்ளதாவது, “ரிஷப் பன்ட் முற்றிலும் வேறுபட்ட ஒரு விளையாட்டு வீரர். அவர் விளையாடிய விதம் மிகவும் தைரியமானது. இன்னும் தூரமாக இருப்பதைப் பற்றி நான் இப்போது சிந்திக்க விரும்பவில்லை.

முதல் இன்னிங்ஸை நல்லபடியாக முடிப்பது குறித்துதான் நான் இப்போது யோசிக்கிறேன். புஜாரா மற்றும் பன்ட் இருவரும் நன்றாக ஆடினாலும், நாங்கள் மீண்டும் நல்ல நிலைக்கு வந்துவிட்டோம்” என்றுள்ளார் டாம் பெஸ்.