சென்னை: இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்டில், இந்திய சுவர் புஜாரவின் துணையுடன், ஆஸ்திரேலியாவில் காட்டிய அதே துணிச்சலுடன் அடித்து ஆடி வருகிறார் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்.

ரோகித் ஷர்மா, விராத் கோலி, ரஹானே போன்ற மூத்தவர்கள் அணியை நட்டாற்றில் விட்டுவிட்டு சென்றுவிட, புஜாராவுடன் இணைந்து சிறப்பாக ஆடிவருகிறார் ரிஷப் பன்ட்.

இதுவரை 44 பந்துகளை சந்தித்துள்ள ரிஷப் பன்ட், 4 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 54 ரன்களை எடுத்து, கிட்டத்தட்ட டி-20 ஆட்டம் ஆடிவருகிறார். இதன்மூலம், இங்கிலாந்து பெளலர்களுக்கு நெருக்கடி கொடுத்து, அவர்களுடைய மனவலிமையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தப் போட்டியில் இவர் சதமடித்தால், அது இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மகுடமாக அமையும்! மறுபக்கம், புஜாரா 111 பந்துகளை சந்தித்து, 7 பவுண்டரிகளுடன் 53 ரன்களை அடித்து இந்திய அணிக்கு காவல் அரணாக இருந்து வருகிறார்.