இஸ்லாமாபாத்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்டில், தனது இரண்டாம் இன்னிங்ஸை ஆடிவரும் பாகிஸ்தான் அணி, தற்போதைய நிலவரப்படி தென்னாப்பிரிக்காவை விட 323 ரன்கள் முன்னிலைப் ப‍ெற்றுள்ளது.

தற்போது நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணி 8 விக்க‍ெட்டுகளை இழந்து 258 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன்மூலம், தனது முதல் இன்னிங்ஸ் ரன்களுடன் சேர்த்து 329 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

அந்த அணியின் முகமது ரிஸ்வான் 92 ரன்கள் அடித்து நாட்அவுட்டாக இருந்து வருகிறார். அவர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் இணைசேர்ந்துள்ள பவுலர் நெளமானஅலி 32 ரன்களுடன் ஆடி வருகிறார்.

தென்னாப்பிரிக்க அணி, தனது முதல் இன்னிங்ஸில் 201 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தென்னாப்பிரிக்கா சார்பில், பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸில், அந்த அணியின் 4 விக்கெட்டுகளை ஜார்ஜ் லிண்டேவும், 3 விக்கெட்டுகளை கேசவ் மகராஜும் கைப்பற்றியுள்ளனர்.