ராமேஸ்வரம்:

ந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிதத இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்துள்ளது.

நேற்று இரவு இந்திய எல்லைக்குள் தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை, மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற மீனவர் கொல்லப்பட்டார். இதையடுத்து தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இந்திய கடல்எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை மீனவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.