சென்னை:

லதுசாரி சிந்தனை காரணமாகவே பாஜக வடஇந்தியாவில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அதுபோன்றதொரு வலதுசாரி சிந்தனை தென்னிந்தியாவில் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்  கே.எஸ்.அழகிரி கூறினார்.

டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி  பிரதமர் மோடிக்கு தமிழகம் மீது அக்கறை இருந்தால் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று  தெரிவித்தார்.

மேலும்,  வலதுசாரிக்கான வாய்ப்பின் காரணமாக பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது, அந்த சிந்தனை தென்னிந்தியாவில் இல்லை என்றும், அதனால்தான் பாஜக தென்னிந்தியாவில் காலூன்ற முடியவில்லை என்று கூறினார்.

மேலும்,  கமல், சீமான் வெற்றி பெறுவதற்கான இலக்கை அடையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.