சென்னை; ரேசன் கடைகளில் விரைவில் அரிசி, சர்க்கரை, பருப்புகள் பாக்கெட்டுகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர்  சக்கரபாணி கூறினார்.

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அரிசி கடத்தலை தடுக்க அண்டை மாநில அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது என்று கூறியவர், ரேசன் கடைகளில்,  பயோமெட்ரிக் முறை கொண்டு வந்த பிறகு, முறைகேடுகள் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ரேசன் கடைகளில் முறைகேடுகள் நடந்தால், அதுகுறித்து 1967 என்ற எண்ணுக்கும், 1800 425 5901 என்ற எண்ணுக்கும் அழைத்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று  கூறியவர், விரைவில், ரேசன் கடைகளில்   அரிசி, சர்க்கரை, பருப்பு உள்பட பொருட்கள்  பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என்றும் கூறினார்.