நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகதாக, அங்கு நடைபெற்ற  புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்து பேசிய முதல்வர்  பழனிசாமி தெரிவித்தார்.

நாகை மாவட்டம் ஒரத்தூரில் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில்  மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சியினர் பங்கேற்றனர்/

அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி, ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க ஒரத்தூரில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது. ஏழை மக்களும் உயர்தர சிகிச்சை பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை. விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும்,  நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறினார்.

நாகை மாவட்டம் ஒரத்தூரில் ரூ.367 கோடியில் புதிதாக மருத்துவ கல்லூரி கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கவே இங்கு மருத்துவககல்லூரி அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

மக்கள் நலம் காக்கவே ஜெயலலிதாவின் ஆசியோடும், அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் அனைத்து மக்கள் நல திட்டங்களை மக்களுக்காகவே செயல் படுத்தி வருகிறது. டெல்டா மாவட்டங்களை பாதுகாகக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இமாலய சாதனை அ.தி.முக. அரசு படைத்துள்ளது.  டெல்டா மாவட்டங்களில் இனி எப்போதும் புதிய தொழிற்சாலை தொடங்க அனுமதி இல்லை. நாகை மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 மாதத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் குறைதீர்க்கும் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாகை மாவட் டத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தடையின்றி இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.