சென்னை:
ண்ணாமலைக்கு எதிராக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. நாட்டின் ஊழல்மிகுந்த மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு முதலிடம் என்று கூட சொல்வேன்” என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசிய கருத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.