ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் இன்று (ஆகஸ்ட் 8) வெளியாகியுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிக்கெட்டுக்காக ரசிகரின் செயலுக்காக சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் கோவமாக பதிவிட்டுள்ளார்.

இப்போது சத்யம் திரையரங்கில் இருக்கிறேன்.. இங்கே எனக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு மனிதர் ‘நேர்கொண்ட பார்வை’ டிக்கெட் பிரச்சனை காரணமாக பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தன்னையே எரித்துக் கொள்ள தீக்குச்சியை தேடிக்கொண்டிருக்கிறார்.

ஒரு படம் ரசித்துப் பார்ப்பதற்கு மட்டுமே அன்றி இது போன்ற காரியங்களை செய்வதற்கு அல்ல என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.