டில்லி

டில்லி வான் எல்லையில் விமானங்கள் பறக்க 2 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று நாடெங்கும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.   அதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.    பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப் படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக டில்லி வான் எல்லையில் 2 மணி நேரம் விமானம் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது.    பல விமானங்கள் தாமதமாகி உள்ளன.