சென்னை: தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் ரயில்நிலையம் ரூ.100 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தபட உள்ளது. இதற்கான டெண்டரை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
கும்பகோணத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான ரயில் நிலைய மறுசீரமைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்பட இருக்கும் நிலையில் அதற்கான டெண்டரை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
மத்தியஅரசு நாடு முழுவதும் உள்ள பழைய ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை செய்து வருகிறது. அதன்படி, ரயில் நிலையங்கள் மேம்பாடு மற்றும் பழமையான ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்தல் ஆகிய பணிகளை நடத்தி வருகிறது. இந்த வடிவமைப்பில் ரயில்களின் புறப்பாடு நடைமேடைகள், நடைபாதை மேம்பாலங்கள், சுரங்கப்பாதை,, பார்சல்களை எடுத்துச் செல்லும் மேம்பாலம், மல்டி லெவல் வாகன நிறுத்துமிடம் வணிக சேவை மற்றும் பார்சல் கட்டிடங்கள் கட்டுதல் என பல மாற்றங்களை செய்ய உள்ளது.
அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் ரயில் நிலையம் புணரமைக்கப்பட உள்ளது. கும்பகோணம் மாநகரம் ஆன்மிக பூமியாக கருதப்படுகிறது. மேலும், புகழ்பெற்ற யாத்திரை தேசம். வடக்கில் கும்பமேளா போன்று, தெற்கில் கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகம் விழா மிகவும் பிரதிசித்தி பெற்றதாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழா வரும் 2028-இல் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வருவாா்கள்/
இதையடுத்து கும்பகோணம் ரயில் நிலையம் மறுசீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் பணிகளை உடனடியாகத் தொடங்கும் வகையில் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் ரூ.100 கோடி செலவில், நூறு ஆண்டுகள் பழமையான கும்பகோணம் ரயில் நிலையத்தை நவீன முறையில் புனரமைப்புடன் விரிவாக்கம் செய்திட தெற்கு ரயில்வே டெண்டர் விடுத்துள்ளது.
டெண்டர் உறுதி செய்யப்பட்ட வுடன் ரயில் நிலைய பணிகள் தொடங்கி விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.