சென்னை: கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் கடும் நடவடிக்கை என தமிழகஅரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, மதமாற்றப் புகார்களும் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே தஞ்சாவூரில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் மற்றும், கன்னியாகுமரி, கோவை பள்ளிகளில் எழுந்த மதமாற்றம் தொடர்பான புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்தநிலையில், கட்டாய மதமாற்றம் குறித்து,  வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில், பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அவரது மனுவில், தஞ்சையில் மாணவி மதமாற்றம் நடவடிக்கையால் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்திருந்தது. இதைத்தவிர திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளில் மதமாற்றம் தொடர்பான புகார்கள் வந்ததாக குறிப்பிட்டுள்ளார். எனவே, மதமாற்றத்தை பள்ளிகளில் அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு த்ரவிட வேண்டும் என்றும் அதற்கான விதிகளை வகுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் து தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கட்டாய மதமாற்றத்தை தடுக்க விதிகளை வகுப்பதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு பதில் கூறிய தமிழகஅரசு வழக்கறிஞர், கன்னியாகுமரி, திருப்பூர் சம்பவங்களை தவிர வேறு எந்த இடத்திலும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக எந்த புகாரும் இல்லை என்றும்கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது.

இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.