சென்னை; இலங்கை மக்களுக்கு உதவ திமுக எம்.பி.க்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

இலங்கையில்  ஆட்சியாளர்களின் திறமையற்ற நடவடிக்கையால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் வரலாறு காணாத அளவில் விலைவாசி உயர்ந்து வருகிறது.  இலங்கை மக்களுக்கு நிதியுதவி வழங்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில், தமிழக முதல்வரன் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்.பி.க்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என திமுக தலைமை அறிவித்தது.

ஏற்கனவே திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியம், திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தையும் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படுமென மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.