சென்னை: 74வது சுதந்திர தினத்தையொட்டி, கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கவுரவித்தனர்.
கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சவுமியா சுவாமிநாதனுக்கு முதலமைச்சர் விருது வழங்கினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து நல் ஆளுமைக்கான விருதை துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.