தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து நல் ஆளுமைக்கான விருதை துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
புதுமையான உத்தியை கையாண்டு நுண்ணீர் பாசனத்தில் சிறந்து விளங்கும் வேளாண் துறைக்கு நல் ஆளுமை விருது
ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனர் க.செல்வகுமாருக்கு அப்துல் கலாம் விருது தரப்பட்டது
துணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது 3 பெண் களுக்கு வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளிக்கு கல்பனா சாவ்லா விருது
கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு விருது
மாற்று திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்த 5 பேருக்கு முதல்வரின் சிறப்பு விருது
1) சென்னையை சேர்ந்த சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் பள்ளிக்கு தொண்டு நிறுவனத்திற்காக விருது
2) சிறந்த சமூக பணியாளர் திருச்சி சாந்தகுமார், சிறந்த மருத்துவராக சேலம் சியாமளாவுக்கு விருது
அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தந்த சக்தி மசாலாவிற்கு சிறப்பு நிறுவனத்திற்கான விருது
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி விருது வழங்கப்பட்டது
கோவை கோதணவள்ளிக்கு மகளிர் நலனில் சிறந்த தொண்டாற்றிய சிறந்த சமூக பணியாளர் விருது
கடலூர் கிரீடு நடனசபாபதிக்கு மகளிர் நலனில் சிறந்த தொண்டாற்றிய சிறந்த தொண்டு நிறுவன விருது
உள்ளாட்சி அமைப்புகளில் சிறந்த மாநகராட்சிக்கான விருது வேலூர் மாநகராட்சிக்கு வழங்கப்படுகிறது. விழுப்புரம் , கரூர் , கூத்தநல்லூர் நகராட்சிகள் சிறந்த நகராட்சியாக தேர்வு
சுதந்திர தின முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள்
1. அருண்குமார், மதுரை
2. ராம்குமார், கடலூர்
3. அம்பேத்கர், சென்னை