திருச்சி:

ணப்பாறை அருகே ஆழ்துறை கிணற்றில் சிக்கி உள்ள குழந்தை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டு  உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

முன்னதாக குழந்தையை மீட்க மதுரை மணிகண்டனின் கருவி மூலம் மீட்க முயற்சி செய்யப்பட்டது.  குழந்தையை பத்திரமாக மீட்கும் நோக்கில் முதலில் குழந்தையின் ஒரு கையில் கயிறு மூலம் சுறுக்கு போடப்பட்டது.  மேலும் மற்றொரு கையில் கயிறு மூலம் சுறுக்கு போட முற்பட்டபோது அது பலன் அளிக்கவில்லாத நிலையில், குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஆழ்துளை கிணற்றில் 25  அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை, மீட்பு பணியின்போத சிலிப் ஆனதால், தற்போது 70 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. இதனால் மீட்புப் பணி கடும் சவாலாக உள்ளது.

குழந்தையை மீட்க ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் குழிதோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்தனர். ஆனால் குறிப்பிட்ட அடிக்கு மேல் பாறை இருந்ததால்,  பாறையை உடைக்கும்போது, அதிர்வு அதிர்வு ஏற்படும் என்பதால் அந்த முயற்சி நிறுத்திவைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இன்று காலை மீட்பு பணியின்போது ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் இருந்து மண் சரிந்து விழுந்துள்ளது. இதனால், குழந்தையை வெளியே எடுப்பதற்கான முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது. அதேசமயம், குறிப்பிட்ட ஆழத்திற்கு கீழ், ஆழ்துளை கிணற்றின் விட்டம் குறைவாக இருந்ததால், மீட்புக் கருவியை தொடர்ந்து செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

ஆழ்துளை கிணற்றில் மண் விழுந்ததால் மீட்புப்பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், குழந்தையை பத்திரமாக மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மீட்பு குழுவினரும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அரசின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து தற்போது வரை சிறுவனை மீட்க போராடி வருகின்றனர் – அமைச்சர் விஜயபாஸ்கர் * கண்காணிப்பு கேமரா மூலம் சிறுவனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது

குழந்தை மூர்ச்சையாகி மீட்கப்பட்டாலும், உயிர்பிழைக்க வைக்க அனைத்து மருத்துவ வசதிகளும் இங்கு தயார் நிலையில் உள்ளன” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். 70, 80 அடியில் இருந்தாலும் சிறுவன் மூச்சுவிடும் சத்தம் கேட்டது. ஆனால், காலை 5.30 மணிக்கு பிறகு, சிறுவன் மூச்சுவிடுவதை கண்டறிய முடியவில்லை. உடல் நிலையையும் கணிக்க முடியவில்லை என்றார்.

15 மணி நேரம் போராடியும், குழந்தையை மீட்கும் முயற்சிக்கு பலன் கிடைக்காததால், அங்கு கூடியுள்ள பொதுமக்களின் அனைவரின் முகங்களும் சோகத்தில் உள்ளது. குழந்தையை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து வருகிறது.