15 வயது சிறுமி கர்ப்பம்.. கம்பி எண்ணும் தொழிலதிபர்..

சென்னை அசோக் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ்.  54 வயதான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்.  இவர் வீட்டில் பாட்டி ஒருவர் வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார்.  இவரது 15 வயது பேத்தி அடிக்கடி பால்ராஜ் வீட்டுக்குச் சென்று பாட்டிக்கு உதவி செய்து வந்திருக்கிறார்.  சமயத்தில் இச்சிறுமி பாட்டியுடனேயே தங்கியும் வந்துள்ளார்.

இதனைச் சாதகமாக்கிக் கொண்ட பால்ராஜ் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.  இது கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகத் தொடர்ந்து வந்துள்ளது.  சிறுமியின் குடும்பச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் பால்ராஜ்.  இவ்விசயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் வந்துள்ளார்.

இச்சூழலில் சமீபத்தில் சிறுமி கர்ப்பமடைந்து விட்டார்.  பயந்து போன சிறுமி, பதறியடித்துக் கொண்டு, ஒரு வருடமாக தனக்கு நடந்த கொடுமைகளைப் பாட்டியிடம் சொல்லி அழுதுள்ளார்.  பாட்டி உடனடியாக போலீசில் இதைப் பற்றி புகார் செய்ய, அதன் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீசார் பால்ராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

– லெட்சுமி பிரியா