சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை நடத்த தயார் நிலையில் உள்ளோம் என்று சத்யபிரதா சாகு கூறி உள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு காணொலி காட்சி வழியே மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழக வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவுகளை நீக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுக்க முடியாது. ஆகவே செயலி மூலம் கண்காணிக்க வேண்டும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய அடிப்படையில் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை நடத்த தயார் நிலையில் உள்ளோம். நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறினார்.